செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்லூரியின் 15-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ சந்திர சேகரேந்திர விஷ்வமகா வித்யாலயா கல்வியியல் துறைத் தலைவர் கே. வி.எஸ்.என்.மூர்த்தி தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து, 25 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைக்கான உத்தரவு நகலை அவர் வழங்கினார். தாளாளர் விகாஸ் சுரானா, பொருளாளர் சுரேஷ் கன்காரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பிருந்தாமணி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி இயக்குநர் பி.ஜி.ஆச்சார்யா வரவேற்றார். எம்பவர்மெண்ட் முதல்வர் மாரிசாமி நன்றி கூறினார்.