தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பக மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
களியாம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு உத்தரமேரூர் ஒன்றியச் செயலாளர் அழிசூர் கன்னியப்பன் தலைமை வகித்தார். நகரச் செயலர் வீரமணி, இளைஞரணி நிர்வாகி அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், ஆதரவற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். அன்னதானமும் வழங்கப்பட்டது.