சிஐடியு ஆர்ப்பாட்டம்

போராட்டம் நடத்தி வரும் ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி சிஐடியு சார்பாக ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


போராட்டம் நடத்தி வரும் ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி சிஐடியு சார்பாக ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதேபோல் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், போராட்டத்தில்  ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின்  கோரிக்கைகளை தமிழக அரசு பேசித் தீர்க்க முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், உழைக்கும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.வசந்தா உள்ளிட்டோர் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com