ராஜீவ் காந்தி மேம்பாட்டு மையத்தில் இளைஞர் தின விழா

இளைஞர் தினவிழாவை முன்னிட்டு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இளைஞர் தினவிழாவை முன்னிட்டு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
 விழாவில், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட குழு விவாத நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 மையத்தின் பதிவாளர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவை கல்வியாளர் கஜேந்திரபாபு தொடங்கிவைத்துப் பேசினார். விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தா இளைஞர் மையத்தின் நிறுவனர் ஸ்ரீ.ம.சத்தியகுமார் பரிசுப் பொருள்களை வழங்கினார். இதில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மையத்தின் பேராசிரியர்கள் லலிதா, லீனா ரேசலின் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com