அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

மதுராந்தகத்தை அடுத்த  கருங்குழி பகுதியில் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு, புதிய உறுப்பினர்களை இணைத்தல், சேவைத் திட்ட பணிகள் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை இரவு


மதுராந்தகத்தை அடுத்த  கருங்குழி பகுதியில் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு, புதிய உறுப்பினர்களை இணைத்தல், சேவைத் திட்ட பணிகள் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன.
கருங்குழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவர் குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.வரதராஜன் வரவேற்றார். சாசனத் தலைவர் எல்.செல்வம், அரிமா சங்க நிர்வாகிகள் கே.லோகநாதன், பி.காந்தி, வி.சத்யமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆண்டுக்கான தலைவர் எஸ்.பாபு, செயலர் சி.விஜய், பொருளாளர் ஆர்.டி.ஜெயபிரகாஷ் ஆகியோரை மாவட்ட இரண்டாம் நிலை ஆளுநர் கே.அய்யனாரப்பன் பதவியில் அமர்த்தி சிறப்புரை ஆற்றினார்.
புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்களை முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.மகேஷ் வரவேற்றார். நலப் பணிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.முருகப்பா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் எம். செல்வம், வட்டாரத் தலைவர் வி.கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைவர் எஸ்.பாபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com