கூடுவாஞ்சேரி அருகில் உள்ள நந்திவரம் பகுதியில் கழிவுநீர்க் கால்வாயில் இருசக்கர வாகனம் விழுந்ததில் பால் வியாபாரி இறந்தார்.
காயரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி கார்த்திகேயன் (40). அவர் செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் நந்திவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நந்திவரத்தில் உள்ள தனியார் நிறுவனம் அருகில் சென்றபோது அவரது வாகனம் நிலை தடுமாறி கழிவுநீர்க்ôல்வாயில் விழுந்தது. இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.