சுவிதா செயலி மூலம் அரசியல் கட்சியினருக்கு மாவட்ட ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மக்களவைத் தேர்தலை அடுத்து கட்சியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சிகளின் வேட்பாளர்கள் பேரணி, பிரசாரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் ஆணையம் சுவிதா செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி மூலம் அனுமதி வழங்குதல், தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு ஆட்சியர் எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.