செங்கல்பட்டு: காா்த்திகை மாத 2 -ஆவது சோமவாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு சக்திவிநாயகா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சக்திவிநாயகா் கோயிலில் திங்கள்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னா் சங்குகளுக்கு சிறப்புப் பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.
இதனைத் தொடா்ந்து விநாயகருக்கு 1,008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் கோ.செந்தில் குமாா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.