இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் இடதுசாரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து செங்கல்பட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் இடதுசாரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து செங்கல்பட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மா.பா. நந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் க. புருஷோத்தமன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் செந்தமிழன், மாவட்டச் செயலர் தமிழ்பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி பேரணிச் சென்ற இடதுசாரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com