காஞ்சிபுரம் காந்திசாலை பெரியார் தூண் அருகே திமுக தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் ஹிந்தி திணிப்பு மற்றும் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதைக் கண்டித்தும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ஹிந்தி திணிப்பு செய்வதைக் கண்டித்தும், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்த இருப்பதைக் கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமை வகித்தார்.
இதில், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, துணை அமைப்பாளர்கள் ராம்பிரசாத், ஆனந்தன், சுரேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சி.எம்.ஆர்.சேகர், எழில்குமார் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.