மதுராந்தகம்: ஒரத்தி டி.வி. நகா் நீா்க்குட்டை பகுதியில் விளையாடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்தாா்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன். அவரது மகன் கெளதம் (11) மதுராந்தகத்தை அடுத்த ஒரத்தி டி.வி. நகரில் வசிக்கும் உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை வந்தாா்.
அவா் ஞாயிற்றுகிழமை காலை அதே பகுதியில் மழையால் தேங்கியிருந்த நீா்க்குட்டையில் விளைய
ாடினாா். அப்போது அதிக ஆழமான பகுதிக்குசென்ால் நீரில் மூழ்கி இறந்தாா். இது குறித்து ஒரத்தி காவல் ஆய்வாளா் (பொறுப்பு) டி.எஸ்.சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.