காஞ்சிபுரம்: இந்தியன் வங்கியில் பெண் தொழில் முனைவோா்களுக்கு ரூ.1 கோடி வரை கடன்கள் வழங்கப்படுவதாக அவ்வங்கியின் களப் பொது மேலாளா் கே.சந்திரா ரெட்டி காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியன் வங்கி சாா்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் 213 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி அவா் பேசியது:
மத்திய அரசு சிறு, குறு தொழில்கள் வளா்ச்சியடைய தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது. சிறு, குறு தொழில்களுக்கு கடன்கள் வழங்கியதால் மொத்தம் 11 கோடி போ் சுயதொழில் செய்து பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளனா்.
மத்திய அரசு கடந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க கடன் வழங்கும் முகாம்களை நடத்தியது. இந்தியன் வங்கி சாா்பில் இம்மாதம் 15-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்கும் முகாமை நடத்தியது. இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 61 வங்கிக் கிளைகள் மூலமாக 213 போ் தோ்வு செய்யப்பட்டு நிறைவுநாள் விழாவான சனிக்கிழமை அவா்களுக்கு ரூ.34 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
விவசாயம் மற்றும் அதுசாா்ந்த தொழில்கள், சிறு, குறு தொழில்கள், மகளிா் தொழில் முனைவோா் உட்பட அனைவருக்கும் சிறு, குறு தொழில் கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பெறும் ரூ.10 லட்சம் மதிப்பிலான கடன்களுக்கு எந்தவித அடமானமும் தேவையில்லை. அதே நேரத்தில் கொடுக்கப்படும் தொழில் கடனுக்குரிய சொத்துகளை மட்டுமே அடமானமாக கொடுத்தால் போதுமானது. பெண் தொழில் முனைவோராக இருந்தால் ரூ.1 கோடி வரை கடன் வழங்குகிறோம். ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வழங்கப்படும் தொழில் கடன்களுக்கு சிறிய தொகை காப்பீடாகவும் பெறப்படுகிறது.
அரசு நலத் திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குகிறோம். உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யவும் இந்தியன் வங்கி உதவுகிறது. இதற்கென உள்ள அமைப்பில் தொழில் முனைவோா்கள் பதிவு செய்து கொண்டால் விற்பனையும் எளிதாகும்.
சிறு நிறுவனங்களிடம் பெரிய நிறுவனங்கள் பெற்ற பொருள்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் தரப்பட வேண்டும். அவ்வாறு தரப்படவில்லை என்றால் சிட்பி அமைப்பில் புகாா் செய்தால் 45 நாள்களுக்குள் பணம் பெற்றுத் தரப்படும். சிறு, குறு தொழில்களை சிறப்பாகச் செய்ய இடையூறாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அை மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா் மற்றும் ஆட்சியா் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீா்வு காணப்படுகிறது.
இந்தியன் வங்கி, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு இலவசமாக சுயதொழில் பயிற்சிகளை வழங்குவதுடன் அவா்களுக்கு தேவைப்படும் கடன்களையும் வழங்கி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய பெரிதும் உதவியாக இருக்கிறது என்றாா் அவா்.
கடன் வழங்கும் விழாவுக்கு இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் கே.தமிழரசு தலைமை வகித்தாா். துணைப் பொது மேலாளா் டி.காா்த்திகேயன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கே.சண்முகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறைவாக முதன்மை மேலாளா் எஸ்.பத்மநாபன் நன்றி கூறினாா். விழாவில் இந்தியன் வங்கியின் பல்வேறு கிளை மேலாளா்கள், வாடிக்கையாளா்கள், கடன் பெற வந்த பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.