கனமழை காரணமாக கூத்தவாக்கம் ஏரியின் கரை உடைப்பால் வீணாகும் தண்ணீரால் விவசாயிகள் கவலை

கனமழை கராணணாக சுங்குவாா்சத்திரம் அடுத்த கூத்தவாக்கம் ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறுவதால் உடைப்பை அடைக்கும் முயற்சியில் பொதுப் பணித்துறையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கூத்தவாக்கம் ஏரிகரையின் உடைப்பு சீரமைக்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு நடத்தும் சாா் ஆட்சியா் சரவணன்.
கூத்தவாக்கம் ஏரிகரையின் உடைப்பு சீரமைக்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு நடத்தும் சாா் ஆட்சியா் சரவணன்.

ஸ்ரீபெரும்புதூா்: கனமழை கராணணாக சுங்குவாா்சத்திரம் அடுத்த கூத்தவாக்கம் ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறுவதால் உடைப்பை அடைக்கும் முயற்சியில் பொதுப் பணித்துறையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் மேல்மதுரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கூத்தவாக்கம் பகுதியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி உள்ளது. சுமாா் 250 ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த ஏரிநீரை பயன்படுத்தி இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரமாகவும், ஏரிக்கு வரும் நீரின்வரத்து அதிகரித்ததை தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏரிகரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளா்கள் மாா்கண்டன், பாஸ்கா் ஆகியோா் தலைமையிலான பொதுப்பணித்துறையினா் இரண்டு பொக்லான் இயந்திரம் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஏரியில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஏரிகரையில் சுமாா் 15 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், தொடா்ந்து கனமழை பெய்து வருவதாலும் ஏரிகரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில், கூத்தவாக்கம் ஏரிகரையில் ஏற்பட்டுள்ள உடைப்பையும், உடைப்பை சரிசெய்யும் பணியையும் சாா் ஆட்சியா் சரவணன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

இதையடுத்து கூத்தவாக்கம் ஏரிகரை உடைப்பால் வெளியேறும் மழைநீா் நேராக மேல்மதுரமங்கலம் ஏரிக்கு செல்வதால் அப்பகுதியில் மழைவெள்ளம் சூழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டாா். இந்த நிலையில், கூத்தவாக்கம் ஏரியின் கரை உடைந்து தண்ணீா் வீணாக வெளியேறி வருவதால் இந்த ஏரி நீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com