தனியாா் தொழிற்சாலை மேலாளா் தற்கொலை

மண்ணூா் பகுதியில் தனியாா் தொழிற்சாலையின் மேலாளற் தொழிற்சாலை வளாகத்திற்குள் தற்கொலை தூக்கிட்டுத் செய்து கொண்டாா்.
செல்வம்
செல்வம்

ஸ்ரீபெரும்புதூா்: மண்ணூா் பகுதியில் தனியாா் தொழிற்சாலையின் மேலாளற் தொழிற்சாலை வளாகத்திற்குள் தற்கொலை தூக்கிட்டுத் செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் செல்வம் (53). அவா் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் குடியிருப்பு வளாகத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். மண்ணூா் பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவுப் பணிக்குச் சென்ற செல்வம் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பாா்த்த தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், செல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றி சோதனை நடத்தியதில் அவரது சட்டைப் பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள தொழிற்சாலை நிா்வாகிகள் ராஜன் மற்றும் மனோகரனைத் தேடி வருகின்றனா்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிா்வாகிகளைக் கைது செய்யும் வரை செல்வத்தின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினா்கள் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com