பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

செங்கல்பட்டு அருகே மளிகைக் கடை நடத்தும் பெண்ணிடம் தகராறு செய்து, தாக்குதல் நடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.


செங்கல்பட்டு அருகே மளிகைக் கடை நடத்தும் பெண்ணிடம் தகராறு செய்து, தாக்குதல் நடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டை அடுத்த பி.வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராமகனி (44). அவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மதி என்பவரின் மகன் டார்ஜான் (30) ஞாயிற்றுக்கிழமை கடைக்கு வந்து ராமகனியிடம் தண்ணீர் கேன் வாங்கினார். அதற்குப் பணம் கொடுக்குமாறு கேட்டதால், டார்ஜான் தகராறில் ஈடுபட்டதுடன் ராமகனியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், டார்ஜானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com