ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் ரத்து

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த ஏலம் ரத்து


ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த ஏலம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நகர பேருந்து நிலையத்தில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக பேருந்து நிலைய மேம்பாட்டு நிதியில் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 26 கடைகள் கட்டப்பட்டன. இந்தக் கடைகள் கடந்த 2010-ஆம் ஆண்டில் ஏலம் விடப்பட்டன. இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கடைகளுக்கான உரிமம் புதுப்பிக்கப்பட்டு வந்தது. 
பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டு 9 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள 26 கடைகளையும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டது. 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த கடைகளுக்கான ஏலம் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com