மதுராந்தகத்தை அடுத்த புழுதிவாக்கம் அக்ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புழுதிவாக்கம் அக்ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டில் பல்வேறு பாடப்பிரிவுகளில் புதிதாக மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் அகிலன் ராம் நாதன் தலைமை வகித்தார்.
கல்லூரி டீன் எம்.டி.அந்தோணி அருள்பிரகாஷ், கல்லூரி முதல்வர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதலாண்டு மாணவ, மாணவியரை, 2-ஆம் ஆண்டு மாணவ, மாணவியர் பூச்செண்டு, இனிப்புகளைக் கொடுத்து வரவேற்றனர்.