திருப்போரூர் அருகே படூர் தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் 28-ஆம் ஆண்டு விழாவுக்கு நிறுவனர்-பேராசிரியர் ஆர்.வி.தனபாலன் தலைமை வகித்தார். இயக்குநர் ஸ்ரீதேவி புகழேந்தி முன்னிலை வகித்தார். செயலர் புகழேந்தி தனபாலன் வரவேற்றார். முதல்வர் பி.குழல்மொழியாள் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் கே.பாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு அவர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பெற்றோர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீதேவி புகழேந்தி உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள் செய்திருந்தனர். துணை முதல்வர் எம். சுனிதா நன்றி கூறினார்.