3 நாள்களாக வேட்பு மனு தாக்கல் இல்லை

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 3-ஆவது நாளான வியாழக்கிழமை  யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 


காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 3-ஆவது நாளான வியாழக்கிழமை  யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளுக்கும், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மார்ச் 19 முதல் 26-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில்,  வியாழக்
கிழமை (மார்ச் 21) வரை எந்த அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலர்களிடம் இருந்து வேட்பாளர்கள் சார்பில் வேட்பு மனுக்களை பெற்றுச்சென்றனர். இதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர் வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com