எறையூர் அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள எறையூர் அரசு ஆரம்பப் பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கும் விழா தலைமையாசியர் அமுதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அப்பகுதி மக்கள் பள்ளிக்குத் தேவையான கல்வி, விளையாட்டு உபகரணங்களை அங்குள்ள சிவன் கோயில் வளாகத்தில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். இதில், தொடக்கக் கல்வி அலுவலர் காஞ்சனா, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.