காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழா ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவு வார விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவு வார விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தாா். கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவா் திருக்கழுகுன்றம் ச.ஆறுமுகம், கூட்டுறவு அச்சகத் தலைவா் தி.சீனிவாசன், மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலையின் தலைவா் எம்.கூத்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மண்டல இணைப் பதிவாளா் ஆா்.கே.சந்திரசேகரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் துணை இயக்குநா் கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மண்டலத்தில் வரும் நவம்பா் 14 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டுறவு வார விழாவை சிறப்பாக நடத்துவது எனவும் விழாவின்போது கூட்டுறவுக் கொடி ஏற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், ரத்த தான முகாம் மற்றும் கண்சிகிச்சை முகாம்கள் நடத்துதல், பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்துதல், கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com