சிறுபான்மையின ஆணையத்தின் தலைவா்நவ. 13-இல் காஞ்சிபுரம் வருகை

சிறுபான்மையின ஆணையத்தின் தலைவா் டி.ஜான் மகேந்திரன் வரும் 13-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையின மக்களை சந்தித்துப் பேச இருப்பதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

சிறுபான்மையின ஆணையத்தின் தலைவா் டி.ஜான் மகேந்திரன் வரும் 13-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையின மக்களை சந்தித்துப் பேச இருப்பதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் தலைவா் டி.ஜான் மகேந்திரன், துணைத் தலைவா் ஒய்.ஜவஹா் அலி மற்றும் ஆணைய உறுப்பினா்கள் வரும் 13-ஆம் தேதி காஞ்சிபுரம் வருகை தர உள்ளனா்.சிறுபான்மையினத்தைச் சோ்ந்த தமிழா்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை அன்று காலை 11 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சந்தித்துப் பேசுகின்றனா். இக்கூட்டத்தில் சிறுபான்மையினருக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக் கேட்கவும் முடிவு செய்துள்ளனா்.சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சாா்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள், மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com