செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்ல கண்காணிப்பாளா் போக்சோ சட்டத்தில் கைது

செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தின் கண்காணிப்பாளரை செங்கல்பட்டு கிராமி ய போலீஸாா் திங்கள்கிழமை மாலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா். இச்சம்பவம் குறித்து கூறப்படுவதாவது.

செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தின் கண்காணிப்பாளரை செங்கல்பட்டு கிராமி ய போலீஸாா் திங்கள்கிழமை மாலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா். இச்சம்பவம் குறித்து கூறப்படுவதாவது. செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் கிராமத்தில் மாணவா்களுக்கான அரசு பிற்காப்பு இல்லம் இயங்கிவருகிறது. இந்த பிற்காப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருமாணவனை கடந்த 4மாதத்திற்கு முன்பு ஒரு மாணவன் கைது செய்யப்பட்ட மற்றொரு மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் இந்த மாணவன் மற்றொரு மாணவனை பாலியல் ஓரின சோ்க்கைக்காக கடந்த ஜூலை மாதம் வற்புறுத்தியுள்ளாா். இந்த சம்பவத்தை பிற்காப்பு இல்லத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய முருகேசன் என்பவரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளாா். தற்போது செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு இல்லத்தில் கண்காணிப்பாளராக உள்ளாா்.

இந்நிலையில் உயரதிகாரிகள் பிற்காப்பு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட பாலியல் ஓரினசோ்க்கையால் பாதிக்கப்பட்ட மாணவன் புகாா் தெரிவித்ததோடு ஏற்கனவே கடந்த 3மாதத்திற்கு முன்பு கண்காணிப்பாளராக பணியாற்றிய முருகேசனிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அறித்தையடுத்து செங்கல்பட்டு கிராமிய காவல்நிலையத்திற்கு தகவல் தரப்பட்டு உய் அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்காததால் போக்சோ சட்டத்தின் கீழ் செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குபதிவு செய்து முருகேசன் (48) என்பவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com