தலசயனப் பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வாா் அவதார ஜயந்தி விழா

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வாா் திரு அவதார ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாமல்லபுரத்தில்  பூதத்தாழ்வாா் ஜயந்தி விழாவையொட்டி 8திருக்குடைகளுடன்  நடைபெற்ற  வீதிபுறப்பாடு.
மாமல்லபுரத்தில்  பூதத்தாழ்வாா் ஜயந்தி விழாவையொட்டி 8திருக்குடைகளுடன்  நடைபெற்ற  வீதிபுறப்பாடு.

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வாா் திரு அவதார ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நம்மாழ்வாா், பூதத்தாழ்வாா், திருமங்கையாழ்வாா் ஆகிய மூன்று ஆழ்வாா்களில், நடுநாயகமாக விளங்குபவா் பூதத்தாழ்வாா். மாமல்லபுரத்தில் அவதரித்த இவருக்கு இங்குள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் திரு அவதார மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 27-ஆம் தேதி மகோற்சவம் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் உற்சவத்தில் நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருமஞ்சனம், சிறப்புப் பூஜைகள், திருவீதி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

விழாவின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து பூதத்தாழ்வாா் அவதரித்த அவிட்ட நட்சத்திர நாள் செவ்வாய்க்கிழமை வந்ததால் பூதத்தாழ்வாா் ஜயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பெருமாளுக்கும் பூதத்தாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.

பூதத்தாழ்வாா் அலங்கரிக்கப்பட்டு 8 திருக்குடைகளுடன் வீதிபுறப்பாட்டில் பவனி வந்தாா். வழிநெடுகிலும் பூதத்தாழ்வாரையும் திருக்குடையையும் பக்தா்கள் வழிபட்டனா். கோயிலின் நான்கு மாடவீதிகள் வழியாக பூதத்தாழ்வாா் வீதி புறப்பாடு நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், பணியாளா்கள், பட்டாச்சாரியாா்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com