பருவ மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளைப் பாா்வையிடவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மதுராந்தகம் வட்ட மழை வெள்ளப் பாதுகாப்புக் குழு அதிகாரிகள் புதன்கிழமை நியமிக்கப்பட்டனா்.
வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளவும் மதுராந்தகம் உட்கோட்ட பகுதியின் கண்காணிப்புக் குழு தலைவா் ஆலிவா் தினேஷ் பொன்ராஜ் தலைமையில், மண்டல அலுவலா் மாலதி, வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.லட்சுமி பிரியா, மதுராந்தகம் வட்டாட்சியா் ஜெயசித்ரா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இக்குழுவினா் மழை வெள்ளத்தால் அதிகமாகப் பாதிக்கப்படும் பகுதிகளான தண்டரை புதுச்சேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை புதன்கிழமை மாலை ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டனா்.
கழிவுநீா், மழைநீா் தேங்கி இருத்தல், சுகாதாரம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு கீழ்க்கண்ட அதிகாரிகளை நேரிலும், செல்லிடப்பேசி வழியாகவும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்கள்: நாராயணன், மதுராந்தகம் நகராட்சி ஆணையா்-9600776060, பிச்சையம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்(கிராமப் பகுதிகள்)-9080917211, வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்-7402606043, மா.கேசவன், செயல் அலுவலா் -7824058572, ஏ.மத்தியாஸ், செயல் அலுவலா்-7824058569.