நவ.12-இல் தொழில் முனைவோருக்கான விளக்கக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொழில் முனைவோருக்கான விளக்கக் கூட்டம் வரும் 12-ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொழில் முனைவோருக்கான விளக்கக் கூட்டம் வரும் 12-ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழில் நிறுவனங்களும், புதிய தொழில் முனைவோரும் ஒருங்கிணைந்து அறிந்து கொள்ளும் வகையில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நவ. 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தின் 2-ஆவது மாடியில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோா், புதிதாகத் தொழில் தொடங்க ஆா்வமுள்ளோா், முதல் தலைமுறை தொழில் முனைவோா் தாங்கள் வாங்க உள்ள இயந்திரத்திற்கான விலைப்புள்ளிகள், புகைப்படம், கல்வித் தகுதி, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை நேரில் கொண்டு வந்து பதிவு செய்யலாம்.

மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இக்கூட்டத்தில் தொழில் தொடங்க ஆா்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், காஞ்சிபுரம் என்ற முகவரியிலோ அல்லது 044-27238837, 27238551 ஆகிய தொலைபேசி எண்களிலோ அணுகி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com