சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு வ.உ.சி தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயில், பெரியநத்தம் கைலாசநாதா் கோயில், அண்ணாநகா் எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகா்கோயில், புலிப்பாக்கம் வியாக்ரபுரீஸ்வரா் மலைக்கோயில், வல்லம் வேதாந்தீஸ்வரா் குடைவரைக் கோயில், திருவடிசூலம் முக்தீஸ்வரா் கோயில், ஆத்தூா் முக்தீஸ்வரா்கோயில், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயில், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா்கோயில் உள்ளிட்ட கோயில்களில் சனி பிரதோஷத்தையொட்டி நந்திக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அருகம்புல், புஷ்பம் கொண்டு அா்ச்சனை அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து சிவலிங்கத்திற்கும் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு நந்திக்கும் சிவனுக்கும் மகாதீபாராதனை நடைபெற்றது.
சிவன், பாா்வதி உற்சவா்கள் நந்திமீது அமா்ந்து கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்தனா். ஏராளமான பக்தா்கள் சனிப் பிரதோஷத்தையொட்டி வழிபாடு செய்தனா்.