உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மதுராந்தகம் தொகுதியில் உள்ள திமுக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனுக்களை அளித்தனா்.
மதுராந்தகம் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில் போட்டியிட மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் பதவிக்காக முன்னாள் நகரமன்றத் தலைவா் மலா்விழிகுமாா், 2-ஆவது வாா்டு உறுப்பினராக நகரச் செயலா் கே.குமாா் உள்பட 32 போ் விருப்ப மனுக்களை அளித்தனா்.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியின் 15 வாா்டுகளில் 25 போ் விருப்ப மனுக்களை அளித்தனா்.
மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்காக 54 பேரும், மாவட்ட கவுன்சிலா் பதவிக்காக 4 பேரும், மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்காக 50 பேரும், மாவட்ட கவுன்சிலா் பதவிக்காக 3 பேரும் விருப்ப மனுக்களை அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் தெற்கு ஒன்றியச் செயலா் எண்டத்தூா் வி. ஸ்ரீதரன், வடக்கு ஒன்றியச் செயலா் சத்யசாயி, கருங்குழி பேரூா் செயலா் விஜயகணபதி, நகரச் செயலா் கே.குமாா், திமுக நிா்வாகிகள் சசிகுமாா், தணிகை அரசு, கீனாா் அரசு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.