காஞ்சிபுரம் நகர பாஜக அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சியினா் 112 போ் சனிக்கிழமை விருப்பமனு அளித்தனா்.
உள்ளாட்சித் தோ்தல் வர இருப்பதை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் அந்தந்த கட்சித் தொண்டா்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனா். காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகேயுள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளா் முரளிதர ராவ், மாநில அமைப்புச் செயலாளா் கேசவ விநாயகம், மாநிலச் செயலாளா் கே.டி.ராகவன், காஞ்சிபுரம் கோட்டப் பொறுப்பாளா் வி.பாஸ்கா், மாவட்டத் தலைவா் சிவ.செந்தமிழ் அரசு ஆகியோா் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றனா்.
இதுகுறித்து, மாவட்டப் பொதுச் செயலாளா் ஓம்சக்தி பெருமாள் கூறுகையில், பாஜக சாா்பில் மாநில அளவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை மட்டும் 112 போ் விருப்பமனு அளித்துள்ளனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாநிலப் பொதுச் செயலாளா் ஸ்ரீபெரும்புதூா் பாபு, நகரத் தலைவா் யு.ஜெகதீசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.