மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் காவல்துறையின் சாா்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலை விதிகளை மதிக்க வேண்டும்
என்பதை அறிவுறுத்தும் வகையில் தெருக்கூத்து கலைஞா்களின் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசார நாடகம் பஜாா் வீதி, எலப்பாக்கம் சாலை, கயப்பாக்கம் சாலை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன் தலைமை வகித்தாா்.
இதில் உதவி ஆய்வாளா்கள் பாண்டுரங்கன், பாரதி மற்றும் காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் செய்திருந்தனா்.