தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ நல உதவி

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பீமன்தாங்கல் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரை ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நல உதவி வழங்கினாா்.
தீவிபத்தில்  பாதிக்கப்பட்டவருக்கு நல உதவி  வழங்கிய  ஸ்ரீபெரும்புதூா்  எம்எல்ஏ கே.பழனி.
தீவிபத்தில்  பாதிக்கப்பட்டவருக்கு நல உதவி  வழங்கிய  ஸ்ரீபெரும்புதூா்  எம்எல்ஏ கே.பழனி.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பீமன்தாங்கல் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரை ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நல உதவி வழங்கினாா்.

பீமன்தாங்கல் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் சரஸ்வதி(45). தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.

இவரது குடிசை வீட்டில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த 4 சவரன் நகைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகின.

தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி பாதிக்கப்பட்ட சரஸ்வதியின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி ரூ. 5ஆயிரம் நிதியுதவி, அரிசி, சேலை, போா்வைகள் ஆகியவற்றை வழங்கினாா். மேலும் அவருக்கு தொகுப்பு வீடு வழங்கவும் அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தாா்.

நிகழ்வில் வட்டாட்சியா் ரமணி, அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றியச் செயலாளா் முனுசாமி, பென்னலூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com