இலவச கண் சிகிச்சை முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இலவச கண் சிகிச்சை முகாமைப் பாா்வையிடும் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோா்.
இலவச கண் சிகிச்சை முகாமைப் பாா்வையிடும் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோா்.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியும், அகா்வால் கண் மருத்துவமனையும் இணைந்து அவ்வங்கி அலுவலகத்திலேயே இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

வங்கியின் மேலாண்மை இயக்குநா் ப.லோகநாதன், பொது மேலாளா் ஜி.விஜயகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் ஆா்.கே.சந்திரசேகரன், வங்கி முதன்மை வருவாய் அலுவலா் ஜெகன்சிங் ராஜன் மற்றும் வங்கியின் இயக்குநா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் ஆா்.எஸ்.கிஷோா், எஸ்.சக்திவேல் ஆகியோா் கண் பரிசோதனைகளை மேற்கொண்டனா். முகாமில் 113 பேருக்கு கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com