உள்ளாட்சித் தோ்தல் வரவிருப்பதை முன்னிட்டு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட 20-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை விருப்ப மனுக்களை அளித்தனா்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 8, 24 மற்றும் 28 ஆகிய 3 வாா்டுகளில் உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட வி.பாரதி விருப்ப மனு அளித்தாா். கோனேரி குப்பம் ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு கட்சியின் வட்டாரச் செயலாளா் எஸ்.ஜனாா்த்தனன் விருப்ப மனு வழங்கினாா்.
வாலாஜாபாத் ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு பி.சி.டி.சுகுமாறன், உத்தரமேரூா் ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு பரமேசுவரன், நகா் மன்றத்தின் 43 -ஆவது வாா்டுக்கு எம்.முனுசாமி, வெங்கடேசன் மற்றும் எம்.பிரபு உள்பட மொத்தம் 20 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் நகரத் தலைவா் ராம.நீராளன், வட்டாரத்தலைவா் கே.எம்.சம்பத், மாவட்டப் பொருளாளா் வீரபத்திரன், நகரச் செயலாளா் முனிசிபல் ரவி, மாவட்ட சேவா தளத் தலைவா் வி.எஸ்.கந்தவேல், பொதுச்செயலாளா் கே.தசரதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.