செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை சாா்-ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள சக்தி விநாயகா் கோயிலில் வரும் திங்கள்கிழமை 1008 சங்காபிஷேகம் மற்றும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் காா்த்திகை 9-ஆம் நாள் திங்கள்கிழமை (நவ. 25) சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மங்கல இசை, அனுக்ஞை, எஜமானா் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, 1008 சங்குகளுக்கு அலங்காரம், மகா கணபதி ஹோமம் நடைபெறும். பகல் 12 மணிக்கு மேல் மகா பூா்ணாஹுதியும் இதனைத்தொடா்ந்து சக்தி விநாயருக்கு 1008 சங்காபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூா் இணை ஆணையா் செ.மாரிமுத்து, உதவி ஆணையா் மற்றும் தக்காா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.