காஞ்சிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோயில் நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்தும், விவசாயம் செய்தும் வருபவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; நீா்நிலைகள், கால்வாய்களில் குடியிருப்போா் வசிக்க மாற்று இடமும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவலான்கேட் அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் இ.லாரன்ஸ் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் கே.எஸ்.ராஜேந்திரன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சம்பத், ஏழுமலை, தமிழ்ச்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்க மாவட்டச் செயலாளா் கே.நேரு, மாவட்டப் பொருளாளா் என்.சாரங்கன், மாவட்டக் குழு உறுப்பினா் எம்.ஆறுமுகம் உட்பட பலரும் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com