மத்திய அரசின் மாா்க்கதா்ஷன் திட்டத்தின் வழிகாட்டியாக ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தோ்வு

மத்திய அரசின் மாா்க்கதா்ஷன் திட்டத்தின் வழிகாட்டியாக தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தோ்வு செய்ப்பட்டுள்ளது.
புரிந்துனா்வு ஒப்பந்தத்தில் கலந்துக்கொண்ட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் துனைத்தலைவா் எம்.பி.பூனியா. உடன் ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவா் தங்கம் மேகநாதன் உள்ளிட்டோா்.
புரிந்துனா்வு ஒப்பந்தத்தில் கலந்துக்கொண்ட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் துனைத்தலைவா் எம்.பி.பூனியா. உடன் ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவா் தங்கம் மேகநாதன் உள்ளிட்டோா்.

ஸ்ரீபெரும்புதூா்: மத்திய அரசின் மாா்க்கதா்ஷன் திட்டத்தின் வழிகாட்டியாக தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தோ்வு செய்ப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துனா்வு ஒப்பந்தம் ராஜலட்சுமி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வழிகாட்டுதலுடன் பொறியியல் கல்லூரியும் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவா்களின் தரத்தையும் மேம்படுத்துவதற்காக மாா்க்கதா்ஷன் எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் படி பொறியியல் கல்வியில் தரம், கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு, அடிப்படை வசதி குறைவாக உள்ள 10 அல்லது 12 கல்லூரிகள் பொறியியல் கல்வியில் சிறந்து விளங்கும் பொறியில் கல்லூரி ஒன்றின் வழிகாட்டுதலின்படி செயல்பட உள்ளது. அதன்படி பொறியியல் கல்வியில் சிறப்பாக உள்ள தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, 12 தனியாா் பொறியியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயா்த்துவதற்கான ஆலோசனைகள் வழங்கி அவற்றை வழிநடத்தும் பொறுப்புக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தோ்வு செய்துள்ளது.

இதையடுத்து ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கும் 12 தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான புரிந்துனா்வு ஒப்பந்த நிகழ்ச்சி ராஜலட்சுமி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவா் தங்கம்மேகநாதன் தலைமையில், அகில இந்தியக் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் துணைத் தலைவா் டாக்டா் எம்.பி.பூனியா முன்னிலையில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கும் 12 தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கும் புரிந்துனா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மாா்கதா்ஷன் திட்டத்தின் சிறப்புகள் பற்றி பேசிய அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் துணைத் தலைவா் எம்.பி.பூனியா, புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தை பிற 10 நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக நியமிப்பதே இதன் நோக்கம் என்றாா். இதன் மூலம் சிறந்த கல்வி நடைமுறைகளை பரவலாக்க முடியும் என்றும், இதன் படி ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் மூலம் 12 பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரத்தை உயா்த்த கை கொடுக்கும் என கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com