காங்கிரஸ் முப்பெரும் விழா

காஞ்சிபுரம் கீரை மண்டபத்தில் காந்தியடிகளின் 150 -ஆவது ஜயந்தி விழா, திருப்பூர் குமரனின் 116-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திருப்பூர் குமரன் வாலிபர் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு விழா மற்றும் ஆகிய

காஞ்சிபுரம் கீரை மண்டபத்தில் காந்தியடிகளின் 150 -ஆவது ஜயந்தி விழா, திருப்பூர் குமரனின் 116-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திருப்பூர் குமரன் வாலிபர் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு விழா மற்றும் ஆகிய முப்பெரும் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 திருப்பூர் குமரன் வாலிபர் சங்க அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு, சங்கத்தலைவர் ஆ.லோகநாதன் தலைமை வகித்தார்.
 இதில், காஞ்சி மேற்கு மாவட்டத் தலைவர் ஜீ.வி.மதியழகன், நகரத் தலைவர் ராம.நீராளன் ஆகியோர் காந்தியடிகள் மற்றும் திருப்பூர் குமரனின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திருப்பூர் குமரன் வாலிபர் சங்க நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com