காஞ்சிபுரம் காந்தி சாலை அருகே ரசாயனப் பொருள் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
ரங்கசாமி திருக்குளம் அருகில் மாசிலாமணி என்பவர் ரசாயனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இக்கடையில் சனிக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதும், அப்பகுதி மக்கள் விஷ்ணுகாஞ்சி காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அலுவலர்களான திருநாவுக்கரசு, அப்துல் பாரி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து, சுமார் 5 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், ரூ. 20 லட்சத்துக்கும் மேலான பொருள்கள் எரிந்து சாம்பலானதாகவும் கூறப்படுகிறது. விஷ்ணுகாஞ்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.