இளம் பெண் தற்கொலை

செங்கல்பட்டு அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.குண்ணவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவரது மனைவி

செங்கல்பட்டு அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
குண்ணவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவரது மனைவி சிவகாமி (21). இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. 
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவகாமி கடந்த 3-ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாராம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவகாமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.  திருமணமாகி ஓராண்டே ஆவதால் செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம் விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com