செங்கல்பட்டு அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
குண்ணவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவரது மனைவி சிவகாமி (21). இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவகாமி கடந்த 3-ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாராம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவகாமி திங்கள்கிழமை உயிரிழந்தார். திருமணமாகி ஓராண்டே ஆவதால் செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம் விசாரித்து வருகிறார்.