டெங்கு காய்ச்சல்: சிறுமி பலி

ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுமி உயிரிழந்தார். 
டெங்கு காய்ச்சல்: சிறுமி பலி


ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுமி உயிரிழந்தார். 
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட நுஷ்ரத் நகர் பகுதியைச் சேர்ந்த இக்பால் மகள் மெஹ்ரீன் (8). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது மெஹ்ரீனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மெஹ்ரீன் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் பலி
வண்டலூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்தான்.
ஓட்டேரி பிரிவுப் பகுதியைச் சேர்ந்த அரிபாபுவின் மகன் ராஜேஷ்  (14). மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 4-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் உயிரிழந்தார். 
இதையடுத்து நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய டெங்கு தடுப்பு விழிப்புணர்வுக் குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு சுகாதாரப் பணயில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com