நாளை குடும்ப அட்டைதாரர்கள் குறைதீர் முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கான  குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற இருப்பதாக ஆட்சியர்


காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கான  குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற இருப்பதாக ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களின் குறை தீர்க்கும் முகாம் சனிக்கிழமை (அக். 12) காலை 10 மணிக்கு அந்தந்தப் பகுதி நியாய விலைக் கடைகளில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டை தொடர்புடைய குறைகள் பரிசீலிக்கப்படும். குடும்ப அட்டைகளில் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் இணைத்தல் தொடர்பான பணிகளும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும்.
இந்த முகாம்கள் காஞ்சிபுரம்-அய்யங்கார்குளம், ஸ்ரீபெரும்புதூர்-வடமங்கலம், உத்தரமேரூர்-சோமநாதபுரம், செங்கல்பட்டு-கீழக் கரணை, திருக்கழுகுன்றம்-மேலேரிப்பாக்கம், திருப்போரூர்-சிறுதாவூர், மதுராந்தகம்-தச்சூர், செய்யூர்-போரூர், வாலாஜாபாத்-திருவங்கரணை ஆகிய 9 நியாயவிலைக்கடைகளில் நடைபெறவுள்ளது. இப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com