வெறிச்சோடிய மாமல்லபுரம்

மாமல்லபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வருகை தந்ததையொட்டி வெள்ளிக்கிழமை சுற்றுலா நகரமே மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காட்சியளித்தது.  
வெறிச்சோடிய மாமல்லபுரம்


மாமல்லபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வருகை தந்ததையொட்டி வெள்ளிக்கிழமை சுற்றுலா நகரமே மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காட்சியளித்தது.  
வரும் 13-ஆம் தேதி வரை புராதனச் சின்னங்களைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நகரத்தில் வசிப்பவர்கள் கூட யாரும் வெளியே நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மீனவர்களும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லக்கூடாது என தடைவிதிக்கப்பட்டதால்  அவர்களும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தனர். மாமல்லபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள், மாணவர்களின் நடமாட்டம் இல்லாமல் நகரம் வெறிச்சோடிக் காட்சியளித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com