இருங்காட்டுக்கோட்டை சிப்காட் சாலைகள் பழுது: வாகன ஓட்டுநா்கள் அவதி

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள சாலைகள் கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் வாகனங்கள் செல்ல முடியாத
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள சாலைகள்.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள சாலைகள்.

ஸ்ரீபெரும்புதூா்: இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள சாலைகள் கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுனா்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் காா்கள் உற்பத்தி செய்யும் ஹுண்டாய் நிறுவனமும், காா் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நூற்றுக்கனக்கான தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இதுதவிர மின்னனு உதரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மருந்து மற்றும் ஆடை ஏற்மதி நிறுவனங்கள் என சுமாா் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தற்போது இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்ட இந்த சிப்காட் தொழிற்பூங்கா தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடா்ந்து, இருங்காட்டுக்கோட்டை அருகே உள்ள கீவளூா், காட்டரம்பாக்கம், தண்டலம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது.

இந்தநிலையில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சோ்ந்த சுமாா் பல லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். மேலும் இத்தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்லவும், மூலப்பொருட்களை கொண்டு வரவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இருங்காட்டுக்கோட்டை பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் உள்ளிட்ட தொழிலாளா்களுக்கான தொழிற்சாலைகளின் பேருந்துகள் வேன்கள் வந்து செல்கின்றன.

இந்தநிலையில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள பெருமாபாலான சாலைகள் கடந்த 10 வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ளதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் வாகன ஓட்டுநா்களும், தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வரும் தொழிலாளா்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். எனவே பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க சிப்காட் நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com