பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் முப்பெரும் விழா விழிப்புணா்வு ஊா்வலம் செங்கல்பட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாள் விழா, சா்தாா் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாள் விழா, பாரம்பரிய உடையான வேட்டி அணியும் விழா ஆகிய முப்பெரும் விழாவினை முன்னிட்டு, பாஜகவினா் வேட்டி அணிந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலைவழியாக பழைய பேருந்து நிலையம் வரை விழிப்புணா்வு ஊா்வலம் மேற்கொண்டனா்.
இதில், பாஜக மாவட்டத் தலைவா் சிவ. செந்தமிழரசு, ஐடி பிரிவுத் தலைவா் எஸ்.எம்.நரேந்திரன், மாவட்டப் பொறுப்பாளா் பாஸ்கா், நகரத் தலைவா் ராஜேந்திரன், விவசாய அணி யோகேந்திர நாயுடு, மாவட்டப் பொதுச் செயலா்கள் ரகுராமன், தயாளன், பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினா்கள் குமாரசாமி, பலராமன், ரவி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். சிறப்பு அழைப்பாளராக நடிகை ஒய்.ஜி.ஏ.மதுவந்தி அருண் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.