உத்தரமேரூர் அருகே அரும்புலியூர் பகுதியில் புதிதாக கல்குவாரி தொடங்க பழவேரி கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரும்புலியூர் பகுதியில் புதிதாக தனியாரால் கல்குவாரி தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தகவலறிந்து அங்கு வந்த பழவேரி கிராம மக்கள் அப்பணிகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் திருமுக்கூடல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த சாலவாக்கம் போலீஸார், கிராமத்தினரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் கலையாமல் அப்பகுதியிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.