மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்படும் கலங்கரை விளக்கத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஒருவாரம் வரை தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதில், நெகிழி குவளைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்தல், மண்குவளை பயன்பாட்டினை அதிகரித்தல் குறித்து, கலங்கரை விளக்கப் பராமரிப்பு அலுவலர் வசந்த் தலைமையில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து கலங்கரை விளக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர்.