ஏரிகளில் மராமத்துப் பணிகள்: செயற்பொறியாளர் ஆய்வு

எடையார்பாக்கம், நாவலூர், வெள்ளாரை ஆகிய ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் என்.என்.தியாகராஜன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
வெள்ளாரை  ஏரியில்  மதகு  அமைக்கும்  பணியை  பார்வையிட்ட பொதுப்பணித்துறை  செயற்பொறியாளர் என்.என். தியாகராஜன். 
வெள்ளாரை  ஏரியில்  மதகு  அமைக்கும்  பணியை  பார்வையிட்ட பொதுப்பணித்துறை  செயற்பொறியாளர் என்.என். தியாகராஜன். 

எடையார்பாக்கம், நாவலூர், வெள்ளாரை ஆகிய ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் என்.என்.தியாகராஜன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள எடையார்பாக்கம், நாவலூர், வெள்ளாரை, அழகூர் ஆகிய ஏரிகளில் நடப்பு நிதியாண்டில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இப்பணிகளை சனிக்கிழமை பார்வையிட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் என்.என்.தியாகராஜன், பணிகளை விரைந்து முடிக்குமாறு விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டார். 
இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், உதவி பொறியாளர் பாஸ்கரன், விவசாய சங்கத் தலைவர்கள் வெள்ளாரை சந்தானம், நாவலூர் காசி, எடையார்பாக்கம் வெங்கடேசன்,  எடையார்பாக்கம் ஏரிபாசனச் சங்கத் தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com