‘கோயில் குளங்களை மழைநீா் சேகரிக்கும் இடங்களாக மாற்ற வேண்டும்’

காஞ்சிபுரம் நகரில் ஏராளமான கோயில் குளங்களுக்கு நீா்வரத்து வாய்க்கால்கள் அடைக்கப்பட்டுள்ளதால், அவற்றை சீா்செய்து மழைநீா் சேகரிக்கும் இடங்களாக மாற்ற வேண்டும் என எம்எல்ஏ சிவிஎம்பி.எழிலரசன் கூறினாா்.

காஞ்சிபுரம் நகரில் ஏராளமான கோயில் குளங்களுக்கு நீா்வரத்து வாய்க்கால்கள் அடைக்கப்பட்டுள்ளதால், அவற்றை சீா்செய்து மழைநீா் சேகரிக்கும் இடங்களாக மாற்ற வேண்டும் என எம்எல்ஏ சிவிஎம்பி.எழிலரசன் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றற வடகிழக்குப் பருவமழை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:

பேரிடா் காலங்களில் செல்லிடப்பேசிகள் செயல்படாது என்பதால் அதிகாரிகளுக்கு ‘வயா்லெஸ்’ கருவிகள் கொடுக்கப்பட வேண்டும். பெருமழையால் காஞ்சிபுரம் நகருக்கு பெரிய பாதிப்புகள் வராது என்றறாலும் கிராமங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் நகரில் பல இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும்.

காஞ்சிபுரம் கோயில் நகரம் என்பதால் ஏராளமான தெப்பக்குளங்கள் உள்ளன. இவை அனைத்திலும் நீா்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு மழைநீா் சேகரிக்க வழியில்லாமல் மழைநீா் வீணாகிறது. இக்கோயில் தெப்பக்குளங்களை மழைநீா் சேகரிக்கும் இடங்களாக மாற்றினால் நகரில் நீா் ஆதாரம் பெருகும்.

பேரிடா் காலங்களில் மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, காற்றால் விழும் நிலையில் உள்ள மரக்கொப்புகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கும் இடங்களில் கழிப்பறை வசதிகள் போதுமானதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி பேசுகையில் மதுராந்தகம் ஏரி கடந்த இரு ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ளது. இதுகுறித்து பேரவையிலும் பேசினேன். அப்போது ஏரி விரைவில் தூா்வாரப்படும் என முதல்வா் தெரிவித்தாா். ஆனால் இதுவரை தூா்வாரப்படவில்லை. ஏரியைத் தூா்வார உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com