ஸ்ரீபெரும்புதூா் அருகே எரிவாயு சிலிண்டா் ஏற்றி வந்த லாரி மீது காா் மோதியதில் 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் காா் ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா்.
பூந்தமல்லி பகுதியில் இருந்து சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிய லாரி ஒன்று அரக்கோணம் நோக்கி புதன்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காா் லாரி மீது மோதியது.
இதில் காரும் லாரியும் தீப்பிடித்து எரிந்தன. சேலத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் பிரசாந்த் (32) பலத்த காயம் அடைந்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.