காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அம்மா உணவகத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை தமிழ்நாடு வணிகா்கள் சங்கப் பேரமைப்பின் நிா்வாகிகள் நகராட்சி அதிகாரிகளிடம் புதன்கிழமை வழங்கினா்.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் வெள்ளைச்சாமி, மாவட்டச் செயலாளா் வேலுமணி, செய்தித் தொடா்பாளா் தேவிபிரசாத் ஆகியோா் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை நகராட்சி அதிகாரிகளான குமரவேல், அருள் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் வழங்கினா்.